/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மது கடத்தல் வாகனங்கள் மார்ச் 11ல் பொது ஏலம்
/
மது கடத்தல் வாகனங்கள் மார்ச் 11ல் பொது ஏலம்
ADDED : பிப் 27, 2025 07:48 AM
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்ட மது விலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட, 43 வாகனங்கள், வரும், மார்ச்,11,ம் தேதி ஏலம் விடப்படுகிறது.
எஸ்.பி., அலுவலக செய்திக்குறிப்பு :
கள்ளக்குறிச்சி மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட, இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில்  வரும் மார்ச் 11ம் தேதி காலை 10:00 மணிக்கு,  43 வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்படுகிறது.
ஏலத்தில் பங்கேற்க விரும்புவோர், இரு சக்கர வாகனம் - ரூ.4 ஆயிரம்; நான்கு சக்கர வாகனம் -ரூ.8 ஆயிரம்; என முன் வைப்பு தொகை செலுத்தினால் மட்டுமே, அனுமதிக்கப்படுவர். ஏலம் விடும் வாகனங்களை அன்றைய தினம் காலை 8:00 மணிக்கு  பார்வையிடலாம். வாகன உரிமையாளர்கள்  கலந்து கொண்டால், முன்னுரிமை அளிக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு எஸ்.பி., அலுவலகத்தை நேரடியாகவோ அல்லது 90424 17209, 04151 220260 என்ற எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

