/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்: 641 பேர் மனு அளிப்பு
/
கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்: 641 பேர் மனு அளிப்பு
கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்: 641 பேர் மனு அளிப்பு
கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்: 641 பேர் மனு அளிப்பு
ADDED : ஜூலை 02, 2024 06:26 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் நடந்த பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் 641 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார்.
இதில் நிலப்பட்டா குறைகள், பட்டா மாற்றம், மகளிர் உரிமை தொகை, வேளாண்மைத்துறை, காவல்துறை, ஊரக வளார்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகம், கூட்டுறவு கடனுதவி, மின்சாரத்துறை சார்பான கோரிக்கை மற்றும் புகார்கள் என மொத்தம் 641 மனுக்கள் பெறப்பட்டது. மனுக்கள் மீது விசாரணை செய்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அரசு துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 4 பேருக்கு ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் பேட்டரியால் இயங்கும் அதிநவீன சக்கர நாற்காலி, இயற்கை மரணமடைந்த மாற்றத்திறனாளிகள் வாரிசு தாரர்களுக்கு ஈமச்சடங்கு மானியமாக 4 பேருக்கு தலா ரூ.85 ஆயிரத்திற்கான காசோலை, விபத்தில் இரு கண்கள் பார்வை இழந்த மாற்றுத்திறனாளிக்கு ரூ.2 லட்சத்திற்கான காசோலை என மொத்தம் 9 பயனாளிளுக்கு ரூ.7 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
கூட்டத்தில் டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் குப்புசாமி, வேளாண்மை இணை இயக்குனர் அசோக்குமார், மாவட்ட மாற்றத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணி, தாட்கோ மேலாளர் பியர்லின், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ரஞ்சித் உட்பட அனைத்துதுறை அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.