/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பெருமாள் கோவிலில் ராமானுஜர் ஜெயந்தி விழா
/
பெருமாள் கோவிலில் ராமானுஜர் ஜெயந்தி விழா
ADDED : மே 13, 2024 06:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி புண்டரீக வள்ளி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் நேற்று ராமானுஜர் ஜெயந்தி விழா நடந்தது.
விழாவையொட்டி நேற்று காலை மூலவர் பெருமாளுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்காரம் செய்து வைக்கப்பட்டது.
தொடர்ந்து மாலை 6:30 மணியளவில் உற்சவ மூர்த்திகள் ஸ்ரீதேவி, பூதேவி, பெருமாள் தாயார் மற்றும் ராமானுஜர் ஆச்சாரியார் சிறப்பு அலங்காரத்தில், உள்பிரகாரம் வலம் வந்து, மண்டபத்தில் எழுந்தருளச் செய்து மகா தீபாராதனை நடந்தது.
நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.