sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்தல் விற்பனையாளர் 'சஸ்பெண்ட்' 

/

ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்தல் விற்பனையாளர் 'சஸ்பெண்ட்' 

ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்தல் விற்பனையாளர் 'சஸ்பெண்ட்' 

ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்தல் விற்பனையாளர் 'சஸ்பெண்ட்' 


ADDED : செப் 04, 2024 03:31 AM

Google News

ADDED : செப் 04, 2024 03:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : சின்னசேலம் அருகே ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்தப்பட்ட சம்பவத்தில் ரேஷன் கடை விற்பனையாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

சின்னசேலம் அடுத்த பங்காரம் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் இருந்து, ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தப்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் நேற்று வைரலாகியது.

இதுகுறித்து பொதுவிநியோக திட்ட மாவட்ட துணை பதிவாளர் சுரேஷ் தலைமையில் முதுநிலை ஆய்வாளர் மணிகண்டன், கூட்டுறவு சார்பதிவாளர் கமலக்கண்ணன், குடிமைப் பொருள் தனி தாசில்தார் ராமகிருஷ்ணன் ஆகியோர் பங்காரம் ரேஷன் கடையில் ஆய்வு செய்தனர்.

அதில், விற்பனையாளர் சத்தியமூர்த்தி, ரேஷன் பொருட்கள் விற்பனையில் முறைகேடு செய்து அரிசி மூட்டைகளை தனி நபர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, கூட்டுறவு சார்பதிவாளர் கமலக்கண்ணன், ரேஷன்கடை விற்பனையாளர் சத்தியமூர்த்தி மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அவரை 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.

ரேஷன் அரிசி கடத்த பயன்படுத்தப்பட்ட ஆட்டோ, கடத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கள்ளக்குறிச்சி குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசில் அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us