/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தொடர் மழையால் ஆற்றில் வெள்ளம்
/
தொடர் மழையால் ஆற்றில் வெள்ளம்
ADDED : ஆக 12, 2024 06:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரம் பகுதியில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கன மழையால் மணி நதியில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
சங்கராபுரம் பகுதியில் கடந்த இரு நாட்களாக இரவில் விடாது கன மழை பெய்து வருகிறது. கல்வராயன்மலையில் பெய்த கனமழையால் மணி நதியில் நேற்று காலை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பூட்டை, செம்பராம்பட்டு, தியாகராஜபுரம் கிராம ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது. தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

