sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

வக்கீல் வீட்டில் கொள்ளை முயற்சி திருக்கோவிலுாரில் பரபரப்பு

/

வக்கீல் வீட்டில் கொள்ளை முயற்சி திருக்கோவிலுாரில் பரபரப்பு

வக்கீல் வீட்டில் கொள்ளை முயற்சி திருக்கோவிலுாரில் பரபரப்பு

வக்கீல் வீட்டில் கொள்ளை முயற்சி திருக்கோவிலுாரில் பரபரப்பு


ADDED : ஜூலை 19, 2024 05:07 AM

Google News

ADDED : ஜூலை 19, 2024 05:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் வழக்கறிஞர் வீட்டில் நடந்த கொள்ளை முயற்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருக்கோவிலுார், வடிவேல் நகரை சேர்ந்தவர் செந்தில்குமார், 50; இவரது மனைவி தேவகி. இவரும் வழக்கறிஞர். நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில் வீட்டைக் பூட்டிக் கொண்டு அறையில் துாங்கினர்.

அதிகாலை 3:00 மணியளவில் கதவு திறக்கும் சத்தம் கேட்டது. சந்தேகத்தின் பேரில் எழுந்து பார்த்தபோது, வீட்டின் பின்பக்க கதவு மற்றும் கேட்டுகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அப்பொழுதும் மற்றொரு அறையில் சத்தம் கேட்டது.

அக்கம்பக்கத்தினர், உறவினர்களுக்கு போன் செய்து, வரவழைத்தனர். அப்போது அறைக்குள் இருந்த மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர்.

அதில், சட்டை பையில் இருந்த பணம் மட்டுமே திருடப்பட்டது. பீரோ முழுதும் துணிகளை கலைத்து நகை பணம் சிக்காததால் ஏமாற்றத்துடன் சென்றுள்ளனர். மேலும் முதல் மாடியில் குடியிருப்பவர்கள் கடந்த ஒரு வாரத்திற்கு முன், வீட்டை பூட்டிவிட்டு ஊருக்கு சென்ற நிலையில், அந்த வீட்டையும் உடைத்து, பீரோவில் இருந்த உடைகளை கலைத்து, திருட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

தகவல் அறிந்த திருக்கோவிலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, கைரேகை நிபுணர்களின் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.






      Dinamalar
      Follow us