/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டம்
/
ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டம்
ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டம்
ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டம்
ADDED : மார் 14, 2025 07:42 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால், அலுவலகங்கள் வெறிச்சோடின.
மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் கலெக்டர் அலுவலகம், மாவட்ட திட்ட இயக்குனர் அலுவலகம், ஊராட்சி உதவி இயக்குனர் அலுவலகம், 9 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில், மொத்தம் 669 அலுவலர்கள் பணிபுரிகின்றனர்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்; வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் உள்ளிட்ட விடுபட்ட உரிமைகளை வழங்க வேண்டும்; என்பன உள்ளிட்ட, 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாநிலம் தழுவிய ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் போராட்டம் நடந்தது. இதில் மாவட்டத்தில் உள்ள, 217 அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.