/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பள்ளி மாணவி மாயம்; போலீஸ் விசாரணை
/
பள்ளி மாணவி மாயம்; போலீஸ் விசாரணை
ADDED : மார் 09, 2025 11:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் காணாமல் போன பள்ளி மாணவியை, போலீசார் தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி, ஏமப்பேரை சேர்ந்தவர் சக்திவேல் மகள் சந்தியா,14; அதே பகுதியில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி, அரசு பள்ளியில், 9 ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த, 7ம் தேதி மதியம் 3:00 மணியளவில் வெளியே சென்றவர் நீண்ட நேரமாகியும் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது பாட்டி, அமுதவள்ளி, கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.