sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சாலையில் கழிவு நீர் பொதுமக்கள் அவதி

/

சாலையில் கழிவு நீர் பொதுமக்கள் அவதி

சாலையில் கழிவு நீர் பொதுமக்கள் அவதி

சாலையில் கழிவு நீர் பொதுமக்கள் அவதி


ADDED : ஜூலை 06, 2024 05:33 AM

Google News

ADDED : ஜூலை 06, 2024 05:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி காந்தி சாலையில் வழிந்தோடிய கழிவு நீரால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

கள்ளக்குறிச்சி காந்தி சாலை வழியாக அரசு மற்றும் தனியார் பஸ்கள் உட்பட நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகிறது. இச்சாலையில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியும் உள்ளது. பள்ளிக்கு அருகே உள்ள குளத்துமேட்டு தெரு முனை பகுதியில் நேற்று கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவு நீர் வழிந்தோடியது.

அவ்வழியாக அதிவேகமாக சென்ற வாகனங்களால் சாலையில் நடந்து செல்வோர் மற்றும் பைக்கில் செல்வோர் மீது கழிவு நீரை வாரி இறைத்தது. இதனால் அவ்வழியாக சென்ற பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

வாகன போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் மிகுதியான காந்தி சாலையில் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு அவ்வப்போது கழிவு நீர் வெளியேறி வருகிறது. இதனை சீரமைக்ககோரி பலமுறை புகார் தெரிவித்தும் தற்காலிக நடவடிக்கை மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிரந்தர தீர்வுக்கான நடவடிக்கை இல்லை.

எனவே, குளத்துமேட்டு தெரு பகுதியில் கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பினை சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்கு நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us