ADDED : ஜூலை 02, 2024 06:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே காணாமல் போன மகனை கண்டுபிடித்து தரக்கோரி அவரது தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
சின்னசேலம் அடுத்த நாககுப்பத்தை சேர்ந்தவர் வடிவேல் மகன் சசிக்குமார்,29; இவர் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் உதவி மேலாளராக பணிபுரிகிறார்.
கடந்த ஜூன் மாதம் 28ம் தேதி வழக்கம்போல் பணிக்கு சென்ற சசிக்குமார், மாலை நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை.
இதனால் அச்சமடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் சசிக்குமாரை தேடியுள்ளனர்.
எங்கு தேடியும் கிடைக்காததால், காணாமல் போன மகன் சசிக்குமாரை கண்டுபிடித்து தரக்கோரி அவரது தந்தை வடிவேல் போலீசில் புகார் அளித்துள்ளார்.
அதன்பேரில், சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.