sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

முன்னாள் படை வீரர்களுக்கு சிறப்பு குறைதீர் கூட்டம்

/

முன்னாள் படை வீரர்களுக்கு சிறப்பு குறைதீர் கூட்டம்

முன்னாள் படை வீரர்களுக்கு சிறப்பு குறைதீர் கூட்டம்

முன்னாள் படை வீரர்களுக்கு சிறப்பு குறைதீர் கூட்டம்


ADDED : ஆக 24, 2024 06:50 AM

Google News

ADDED : ஆக 24, 2024 06:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்பு குறைதீர்வு கூட்டம் நடந்தது.

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் படை வீரர் நலத்துறை சார்பில் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி பல்வேறு திட்டங்களின் கீழ் நலத்திட்ட உதவிகள் கோரி முன்னாள் படை வீரர்கள் மற்றும் அரவது குடும்பத்தினர் அளித்த 10 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். தொடர்ந்து மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு தகுதியின் அடிப்படையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர் முன்னாள் படை வீரர் நல நிதியிலிருந்து ஈமச்சடங்கு நிதியுதவியாக 2 பேருக்கு தலா 7 ஆயிரம் ரூபாய், 2 பேருக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவிக்கான காசோலையை கலெக்டர் வழங்கினார்.

கூட்டத்தில் முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குனர் ஆயிஷாபேகம் மற்றும் முன்னாள் படை வீரர்கள், முன்னாள் படைவீரர் குடும்பத்தினர் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us