/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி
/
மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி
மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி
மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி
ADDED : ஆக 30, 2024 12:11 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வரும் 4 மற்றும் 6 ம் தேதி பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி நடக்கிறது.
இது குறித்து கலெக்டர் பிரசாந்த் விடுத்துள்ள செய்திக்குறிப்பு;
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில், அண்ணாதுரை, பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு பேச்சு போட்டி பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ மாணவிகளுக்கு நடத்தப்படுகிறது. வரும் 4 மற்றும் 6 ம் தேதி காலை 10:00 மணிக்கு பள்ளி மாணவர்களுக்கு கள்ளக்குறிச்சி அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரியில் கல்லுாரி மாணவர்களுக்கும் போட்டிகள் நடக்கிறது.
போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ. 5 ஆயிரம், 2ம் பரிசு 3 ஆயிரம், மூன்றாம் பரிசு 2 ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது. அரசு பள்ளி மாணவர்கள் இருவருக்கு சிறப்பு பரிசுத் தொகை 2 ஆயிரம் வழங்கப்படுகிறது.
மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.