ADDED : ஆக 17, 2024 03:21 AM
அ நிறம் | அளவு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மாயமான கல்லுாரி மாணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த நிறைமதியை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் அருள்குமரன்,19; இவர் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரசு கலைக் கல்லுாரியில் படித்து வருகிறார்.
விடுமுறைக்கு வீட்டிற்கு வந்த அருள்குமரன், நேற்று முன்தினம் மீண்டும் கல்லுாரிக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் அருள்குமரன் கல்லுாரிக்கு செல்லாததையடுத்து அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.
இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
