ADDED : செப் 02, 2024 09:23 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் காணாமல் போன கல்லுாரி மாணவி குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி, விநாயகா நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் மகள் சினேகா, 23; தனியார் கல்லுாரியில் படித்து வருகிறார். நேற்று முன்தினம் கல்லுாரிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.