நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமூக நல அலுவலகம் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது.
கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். இதில், சமூக நலத்துறை திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 2 பெண் குழந்தைகள் திட்டத்தில் முதிர்வு தொகை பெற சான்றிதழ்களை சமர்ப்பித்து பயனடைய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா உட்பட பலர் பங்கேற்றனர்.