sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

லோக்சபா தொகுதி வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்கள் குறித்து ஆய்வு

/

லோக்சபா தொகுதி வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்கள் குறித்து ஆய்வு

லோக்சபா தொகுதி வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்கள் குறித்து ஆய்வு

லோக்சபா தொகுதி வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்கள் குறித்து ஆய்வு


ADDED : ஜூலை 02, 2024 11:20 PM

Google News

ADDED : ஜூலை 02, 2024 11:20 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி வேட்பாளர்கள் தாக்கல் செய்த இறுதிக் கட்ட தேர்தல் செலவினங்களை தேர்தல் செலவின பார்வையாளர் ஆய்வு செய்தார்.

கள்ளக்குறிச்சி லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் தங்களது 3வது மற்றும் இறுதியான தேர்தல் செலவினங்களை தாக்கல் செய்வதற்கான ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

கூட்டத்திற்கு, தேர்தல் செலவின பார்வையாளர் மனோஜ்குமார் தலைமை தாங்கினார். கலெக்டர் பிரசாந்த் முன்னிலை வகித்தார். லோக்சபா தேர்தலில் ஒவ்வொரு வேட்பாளர்களும் 95 லட்சம் ரூபாய் வரை தேர்தல் செலவினங்கள் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதி அளித்திருந்தது. தேர்தலுக்கு முன் 2 முறையும், அதன்பின் 3வது முறை இறுதியான செலவின கணக்கு தாக்கல் செய்ய அறிவுறுத்தியது.

அதன்படி நேற்று நடந்த இறுதிக் கட்ட தேர்தல் செலவின ஆய்வு கூட்டத்தில் அனைத்து வேட்பாளர்களும் தங்களது செலவினங்களை ஒப்படைத்தனர். அதில் தேர்தல் செலவின பார்வையாளர், வேட்பாளர்கள் தாக்கல் செய்த தேர்தல் செலவினங்களை ஆய்வு செய்தார்.

கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) பாலமுருகன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) பழனிசாமி, உதவி செலவின மேற்பார்வையாளர்கள், தேர்தல் தனி தாசில்தார் பசுபதி மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us