sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கோட்டமருதுாரில் 100 நாள் வேலையில் ஈடுபட்ட பெண்கள் திடீர் மறியல்

/

கோட்டமருதுாரில் 100 நாள் வேலையில் ஈடுபட்ட பெண்கள் திடீர் மறியல்

கோட்டமருதுாரில் 100 நாள் வேலையில் ஈடுபட்ட பெண்கள் திடீர் மறியல்

கோட்டமருதுாரில் 100 நாள் வேலையில் ஈடுபட்ட பெண்கள் திடீர் மறியல்


ADDED : ஜூலை 23, 2024 11:19 PM

Google News

ADDED : ஜூலை 23, 2024 11:19 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார் : அரகண்டநல்லுார் அடுத்த கோட்டமருதுார் கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் சிலருக்கு வருகை பதிவேட்டில் வருகையை பதிவு செய்யாததால் பெண்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

முகையூர் ஒன்றியம், மணம்பூண்டி அடுத்த கோட்டமருதுார் கிராமத்தில் நேற்று 100 நாள் வேலை திட்டத்தில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில் 5 பேர் அவசர பணியின் காரணமாக அங்கிருந்து சென்றதாக தெரிகிறது.

சம்பவம் இடத்திலிருந்த பணித்தள பொறுப்பாளர் அவர்களுக்கு வருகைப் பதிவில் ஆப்செண்ட் போடுவதாக கூறியதால் பணியில் ஈடுபட்டிருந்த 40 பெண்கள், 10 ஆண்கள் உள்ளிட்ட 50க் கும் மேற்பட்டோர் கோட்டமருதுார் பஸ் ஸ்டாப் அருகே மதியம் 2:40 மணி அளவில் மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த மேற்பார்வையாளர் செந்தில் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதன் காரணமாக 30 நிமிடம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us