/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கோடை கால விளையாட்டு நாளை முதல் பயிற்சி முகாம்
/
கோடை கால விளையாட்டு நாளை முதல் பயிற்சி முகாம்
ADDED : ஏப் 28, 2024 04:45 AM
கள்ளக்குறிச்சி ; கள்ளக்குறிச்சி மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், 2024-25ம் ஆண்டிற்கான கோடைகால பயிற்சி முகாம் நடக்கிறது.
இதுகுறித்து கலெக்டர் ஷ்ரவன்குமார் செய்திக்குறிப்பு:
தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தடகளம், கபடி, கைப்பந்து; சின்னசேலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கால்பந்து டேக்வாண்டோ விளையாட்டுப் பயிற்சிகள் நாளை 29 முதல் மே 13ம் தேதி வரை 15 நாட்களுக்கு காலை 6:30 மணி முதல் 8:30 மணி வரையிலும், மாலை 4:30 மணி முதல் 6:30 மணி வரை நடைபெற உள்ளது.
இப்பயிற்சி முகாமில் பங்கேற்பவர்கள் ஆதார் கார்டு நகல் சமர்ப்பிக்க வேண்டும்.
முகாமில் பள்ளி, கல்லுாரியில் பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் மாணவர் அல்லாத 18 வயதுக்கும் கீழ் உள்ளவர்களும் பங்கேற்கலாம்.
முகாமில் பங்கேற்கும் அனைவருக்கும் பங்குபெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்படும். முகாமில் பங்கேற்போர் சந்தா தொகை 200 ரூபாய் செலுத்த வேண்டும்.
போட்டிகள் நடைபெறும் இடத்திற்கு நேரில் சென்று தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் மொபைல் எண். 7401703474 என்ற எண்ணினை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

