sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

தங்க பல்லக்கில் சுவாமி வீதியுலா

/

தங்க பல்லக்கில் சுவாமி வீதியுலா

தங்க பல்லக்கில் சுவாமி வீதியுலா

தங்க பல்லக்கில் சுவாமி வீதியுலா


ADDED : ஆக 30, 2024 12:19 AM

Google News

ADDED : ஆக 30, 2024 12:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவில் வேணுகோபாலன் ஜெயந்தி மகோற்சவத்தின் நான்காம் நாளான நேற்று சுவாமி தங்க பல்லக்கில் வீதியுலா நடந்தது.

திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் வேணுகோபாலன் ஜெயந்தி மகோற்சவ விழா கடந்த 26ம் தேதி துவங்கியது. விழாவின் 4ம் நாளான நேற்று காலை 5:00 மணிக்கு மூலவர் பெருமாள் விஸ்வரூப தரிசனம், 7:30 மணிக்கு வேணுகோபாலன் குருவாயூர் கிருஷ்ணர் அலங்காரத்தில் தங்க பல்லக்கில் வீதியுலா வந்து அருள்பாலித்தார்.

11:00 மணிக்கு ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபாலனுக்கு விசேஷ திருமஞ்சனம், திருவாய்மொழி சேவை, சாற்றுமறை நடந்தது. இரவு 7:30 மணிக்கு வேணுகோபாலன் பெரியசேஷ வாகனத்தில் எழுந்தருளி வான வேடிக்கையுடன் வீதியுலா நடந்தது.

விழா ஏற்பாடுகளை தேவஸ்தான ஏஜென்ட் கோலாகலன் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us