ADDED : மார் 07, 2025 11:26 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரத்தைச் சேர்ந்த தமிழறிஞருக்கு, தமிழ்ச் செம்மல் விருது வழங்கப்பட்டது.
சங்கராபுரம் அடுத்த விருகாவூர் தமிழ்ச்சங்கத் தலைவர் சண்முகம் பிச்சப்பிள்ளை. இவரது தமிழ் சேவையை பாராட்டி, கடந்த, 2023ம் ஆண்டிற்கான தமிழ்ச்செம்மல் விருது, வழங்கப்பட்டது.
இந்த விருதை, சென்னையில் நடந்த விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார். நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் அவ்வை அருள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.