ADDED : செப் 08, 2024 06:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரம் இன்னர் வீல் கிளப் சார்பில் ஆசிரியர் தின விழா நடந்தது.
சங்கராபுரம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடந்த விழாவிற்கு இன்னர் வீல் கிளப் தலைவி சுபாஷினி ரமேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் உஷாதேவி வரவேற்றார்.
பள்ளி தலைமை ஆசிரிரை ரோகயாபீ, இன்னர் வீல் முன்னாள் தலைவர்கள் தீபா சுகுமார், அகல்யா ரவிச்சந்திரன், கவுரி விஜயகுமார் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி தலைவர் ரோஜாரமணி, பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் தனலட்சுமி வாழ்த்திப் பேசினர்.
ஆசிரியர் தின விழாவை முன்னிட்டு ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து கேடயம் வழங்கப்பட்டது. பொருளாளர் மஞ்சுளா கோவிந்தராஜ் நன்றி கூறினார்.