sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

லாரி மீது பொலிரோ வேன் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது

/

லாரி மீது பொலிரோ வேன் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது

லாரி மீது பொலிரோ வேன் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது

லாரி மீது பொலிரோ வேன் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது


ADDED : ஜூன் 03, 2024 05:27 AM

Google News

ADDED : ஜூன் 03, 2024 05:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் ஈச்சர் லாரி மீது மோதிய பொலிரோ பிக்கப் வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கோயம்புத்துார் கிணத்துக் கடவு பகுதியைச் சேர்ந்தவர் பாலகுமார், 30; லாரி டிரைவர். இவர், நேற்று முன்தினம் கோயம்புத்துாரிலிருந்து சென்னைக்கு ஈச்சர் லாரியில் லோடு ஏற்றிச் சென்றார்.

கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் பைபாஸ் சாலை அருகே சென்றபோது எதிரே ராமநாதபுரம் மாவட்டம் மகா சக்தி நகரைச் சேர்ந்த கனகசிங்கம் மகன் பிரசாந்த், 24; ஓட்டி வந்த பொலிரோ பிக்கப் வேன் கட்டுப்பாட்டை இழந்து ஈச்சர் லாரி மீது மோதி, சாலையோர தடுப்புச் சுவரில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.

விபத்தில் காயமடைந்த ஈச்சர் லாரி டிரைவர் பாலகுமார், பிரசாந்த் ஆகியோரை பொதுமக்கள் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, விபத்துக்குளான லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.

விபத்து குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us