sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கழிவறையில் வழுக்கி விழுந்து நடத்துனர் பலி

/

கழிவறையில் வழுக்கி விழுந்து நடத்துனர் பலி

கழிவறையில் வழுக்கி விழுந்து நடத்துனர் பலி

கழிவறையில் வழுக்கி விழுந்து நடத்துனர் பலி


ADDED : ஜூலை 09, 2024 11:31 PM

Google News

ADDED : ஜூலை 09, 2024 11:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரிஷிவந்தியம் : பகண்டைகூட்ரோட்டில் கழிவறையில் தவறி விழுந்த தனியார் பஸ் நடத்துனர் இறந்தார்.

வாணாபுரம் அடுத்த சித்தேரிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் குப்புசாமி மகன் ராஜேஷ்,30; தனியார் பஸ்சில் நடத்துனராக பணிபுரிந்தார். ராஜேஷ் கடந்த ஒரு வருடமாக மனைவி வினோதினி, மகன் யஷ்வந்துடன் பகண்டைகூட்ரோட்டில் வாடகை வீட்டில் வசிக்கிறார். கடந்த ஒரு மாதத்திற்கு முன் நடந்த விபத்தில், ராஜேஷின் இரு கால்களிலும் காயம் ஏற்பட்டது. இதனால் ராஜேஷ் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே உள்ளார்.

நேற்று முன்தினம் காலை 8.30 மணியளவில் சித்தேரிப்பட்டில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்ற வினோதினி, பல முறை ராஜேஷிற்கு போன் செய்துள்ளார். ராஜேஷ் போன் எடுக்கவில்லை. தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் வினோதினி வந்து பார்த்த போது, பாத்ரூம் தாழ்ப்பாள் போட்ட நிலையில் இருந்தது. இதனால் சந்தேகமடைந்து கதவிற்கு மேல் எட்டி பார்த்த போது, ராஜேஷ் சாய்ந்த நிலையில் இருந்துள்ளார்.

உடன் அக்கம், பக்கத்தினர் உதவியுடன் பாத்ரூம் கதவை திறந்து பார்த்த போது ராஜேஷ் இறந்த நிலையில் இருந்தார்.

தகவலறிந்த பகண்டைகூட்ரோடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, ராஜேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us