ADDED : ஏப் 26, 2024 11:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் அறக்கட்டளை உறுப்பினர் பிரமோத், தாயார் கௌசல்யாபாய் நேற்று காலை உயிரிழந்தார். இவரது கண்ணை தானமாக வழங்க குடும்பத்தினர் முன்வந்தனர்.
இதனை அடுத்து திருக்கோவிலூர் கோயில் நகர லயன்ஸ் சங்கம் ஏற்பாட்டில், இறந்தவரின் கணகள் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனையின் மருத்துவ குழுவினர் மூலம் தானமாக வழங்கப்பட்டது.
இதில் லயன்ஸ் கிளப் துணை ஆளுநர் ராஜாசுப்பிரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கண் தானம் வழங்கிய குடும்பத்தாருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

