/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பள்ளி மாணவி மாயம் தாயார் போலீசில் புகார்
/
பள்ளி மாணவி மாயம் தாயார் போலீசில் புகார்
ADDED : செப் 14, 2024 07:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: காணாமல் போன தனது மகளை கண்டுபிடித்து தரும்படி தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.
சங்கராபுரம் அடுத்த கீழப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது 17 வயது மகள் முரார்பாளையம் அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். நேற்று முன் தினம் வீட்டில் படுத்து துாங்கி கொண்டிருந்தவர் மறுநாள் காலை பார்த்தபோது காணவில்லை.
இதுகுறித்து அவரது தாயார் தாய் சுமதி கொடுத்துள்ள புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.