நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை, - உளுந்துார்பேட்டை அருகே வயல் வரப்பில் தவறி விழுந்து முதியவர் இறந்தார்.
உளுந்துார்பேட்டை அடுத்த எடைக்கல் பகுதியைச் சேர்ந்தவர் வேலாயுதம், 85; சற்று மனநிலை பாதிக்கப்பட்ட இவர், கடந்த 1ம் தேதி மதியம் வீட்டை விட்டு வெளியே சென்றவரைக் காணவில்லை.
இந்நிலையில், மறுநாள் 2ம் தேதி காலை 8:00 மணியளவில் அருகே உள்ள வயல் வரப்பில் தவறி விழுந்து இறந்து கிடந்தது தெரியவந்தது. புகாரின் பேரில், எடைக்கல் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.