/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கிணற்றில் முதியவர் உடல் போலீசார் விசாரணை
/
கிணற்றில் முதியவர் உடல் போலீசார் விசாரணை
ADDED : ஆக 25, 2024 06:24 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் வீட்டில் உள்ள கிணற்றில் இறந்து கிடந்த முதியவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி, கவரைத் தெருவைச் சேர்ந்தவர் கோபால், 84; பேக்கரி கடை உரிமையாளர். இவருக்கு 3 பெண், 1 ஆண் என 4 பிள்ளைகள் உள்ளனர். கோபால் தனது சொத்துக்களை, 3 பெண் பிள்ளைகளுக்கு மட்டும் எழுதி கொடுத்துள்ளார். மகனுக்கு எதுவும் தரவில்லை.
இந்நிலையில், மகனுக்கு சொத்தினை தர வேண்டும் என்பதற்காக, மகள்களிடம் எழுதிக் கொடுத்த சொத்துகளை திருப்பித் தருமாறு கோபால் கேட்டுள்ளார். அதற்கு மகள்கள் சம்மதிக்காததால் கோபால் மனவேதனையில் இருந்து வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கோபால் வழக்கம்போல் சாப்பிட்டு துாங்கியுள்ளார். நேற்று காலை அவரது மகன் ரவிச்சந்திரன் எழுந்து பார்த்தபோது, கோபால் வீட்டில் இல்லாததால் பல்வேறு இடங்களில் தேடினார். அதில், வீட்டில் உள்ள கிணற்றில் கோபால் இறந்து கிடந்தது தெரிந்தது.
தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, கோபாலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.