தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கத்தி குத்து மூவர் கைது

கத்தி குத்து மூவர் கைது

கத்தி குத்து மூவர் கைது


ADDED : ஜூலை 14, 2024 06:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 14, 2024 06:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி, : சின்னசேலம் அடுத்த மூங்கில்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக்குமார், 42; இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த கணபதி மகன் செல்வம், 24; என்பவருக்கும் போக்சோ வழக்கு தொடர்பாக முன்விரோதம் உள்ளது.

இந்நிலையில், செல்வம் தரப்பினர் வழக்கை வாபஸ் பெறக்கோரி அசோக்குமாரை வற்புறுத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 9:30 மணிக்கு அசோக்குமார், அவரது உறவினர் மூங்கில்பாடி சுரேஷ்,36; ஆகியோரை செல்வம் தரப்பினர் கத்தியால் குத்தினர். படுகாயமடைந்த இருவரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து கணபதி, 47; இவரது மகன் செல்வம்,24; விஜயகுமார்,29; ஆகியோரை கைது செய்தனர். மேலும் மூவரை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us