sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

திருநங்கைகள் சாலை மறியல் சங்கராபுரத்தில் பரபரப்பு

/

திருநங்கைகள் சாலை மறியல் சங்கராபுரத்தில் பரபரப்பு

திருநங்கைகள் சாலை மறியல் சங்கராபுரத்தில் பரபரப்பு

திருநங்கைகள் சாலை மறியல் சங்கராபுரத்தில் பரபரப்பு


ADDED : ஆக 16, 2024 06:40 AM

Google News

ADDED : ஆக 16, 2024 06:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம்: சங்கராபுரத்தில் திருநங்கைகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் 40 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.

சங்கராபுரம் அடுத்த கொசப்பாடி கிராமத்தைச் ரேணுகா. திருநங்கை. இவருக்கு சொந்தமான நிலம் அப்பகுதி ஏரிக்கரையில் உள்ளது.

இந்நிலையில், அதே ஊரைச் சேர்ந்த பாலன் என்பவர் ஜே.சி.பி., மூலம் ஏரிக்கரையை நேற்று அகற்றியுள்ளார். இதற்கு ரேணுகா எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், ரேணுகாவை, பாலன் திட்டியுள்ளார்.

இதனை கண்டித்து நேற்று மாலை 5:00 மணியளவில் 50 க்கும் மேற்பட்ட திருநங்கைகள் சங்கராபுரம் கடைவீதி மும்முனை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் வினாயக முருகன் மற்றும் போலீசார் மறிலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ரேணுகா திடீரென மண்ணெண்ணெயை ஊற்றி தீ குளிக்க முயன்றார். போலீசார் அவரிடமிருந்த மண்ணெண்ணெய் கேனை பறித்தனர்.

தொடர்ந்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததன் பேரில், 5:40 மணியளவில் மறியலை விலக்கிக் கொண்டனர்.

இந்த மறியலால் சங்கராபுரம் - கள்ளக்குறிச்சி சாலையில் 40 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.






      Dinamalar
      Follow us