sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மணலுார்பேட்டை நுாலகத்தில் முப்பெரும் விழா

/

மணலுார்பேட்டை நுாலகத்தில் முப்பெரும் விழா

மணலுார்பேட்டை நுாலகத்தில் முப்பெரும் விழா

மணலுார்பேட்டை நுாலகத்தில் முப்பெரும் விழா


ADDED : மார் 06, 2025 02:13 AM

Google News

ADDED : மார் 06, 2025 02:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: மணலுார்பேட்டை பேரூராட்சி, கிளை நூலகத்தில், 60 வது ஆண்டு விழா, நடந்தது. இதில் புத்தகக் கண்காட்சி, புரவலர்களுக்கு பட்டயம் வழங்குதல், புதிய புரவலர்கள் சேர்க்கை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இடம் பெற்றதால், முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது.

வாசகர் வட்ட குழு தலைவர் அய்யாக்கண்ணு தலைமை தாங்கினார். அரிமா சங்க மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ், அறங்காவலர் குழு மாவட்ட தலைவர் பாலாஜி பூபதி, வர்த்தகர் சங்க தலைவர் அம்மு, இள மின் பொறியாளர் வெங்கடாசலம், அரிமா சங்க தலைவர் சரவணன் முன்னிலை வகித்தனர். நூலகர் அன்பழகன் வரவேற்றார்.

பேரூராட்சி தலைவர் ரேவதி புத்தக கண்காட்சியை திறந்து வைத்து, தமிழக அரசின் புரவலர்களுக்கான பட்டயங்களை வழங்கினார்.

வர்த்தக சங்க கவுரவ தலைவர் சண்முகம், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சித்ரா, நுாலக புரவலர்கள் நடராஜன், பாண்டுரங்கன் உள்ளிட்டோர் பேசினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை நுாலக பணியாளர்கள் தேவி, பாஸ்கரன் செய்திருந்தனர்.

வாசகர் வட்ட பொருளாளர் சந்திரமோகன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us