/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சாலை விபத்தில் இரு சிறுவர்கள் பலி
/
சாலை விபத்தில் இரு சிறுவர்கள் பலி
ADDED : மே 29, 2024 05:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த கீழ்நாரியப்பனுாரை சேர்ந்தவர் ஜெயராமன் மகன் ஆர்யா,17; இவரும் அதே கிராமத்தை சேர்ந்த மணி மகன் கிேஷார்,17; என்பவரும் நேற்று மாலை 5:30 மணிக்கு பைக்கில் செம்பாக்குறிச்சி கிராமத்தில் சென்றுக் கொண்டிருந்தனர்.
அப்போது, சாலையின் குறுக்கே ஓடிய செல்லபாண்டி மகன் தஷ்வந்த்,5; மீது பைக் மோதியது.
இந்த விபத்தில் பைக் ஓட்டிச் சென்ற ஆகாஷ் அதே இடத்தில் இறந்தார்.
படுகாயமடைந்த கிஷோர் மற்றும் தஷ்வந்த், சின்னசேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கிஷோர் இறந்தார்.
விபத்து குறித்து கீழ்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.