/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
இரு வேறு இடங்களில் நீரில் மூழ்கி பெண் உட்பட 2 பேர் சாவு
/
இரு வேறு இடங்களில் நீரில் மூழ்கி பெண் உட்பட 2 பேர் சாவு
இரு வேறு இடங்களில் நீரில் மூழ்கி பெண் உட்பட 2 பேர் சாவு
இரு வேறு இடங்களில் நீரில் மூழ்கி பெண் உட்பட 2 பேர் சாவு
ADDED : பிப் 23, 2025 06:10 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட பெண் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாணாபுரம் அடுத்த பெரியபகண்டை காலனியைச் சேர்ந்தவர் பெரியசாமி மகள் சக்தி, 26; மனநலம் பாதிக்கப்பட்டவர். இவருக்கு அடிக்கடி வலிப்பு ஏற்படுவது வழக்கம்.
கடந்த, 21ம் தேதி இரவு 9:00 மணிக்கு, இயற்கை உபாதை காரணமாக, வெளியே சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர்.
அப்போது, அதே பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் இறந்து கிடந்தது தெரியவந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கிணற்றில் இறங்கி சக்தியின் உடலை மீட்டனர்.
மேலும் ஒரு சம்பவம்
வாணாபுரம் அடுத்த சூ.ராயபுரத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ், 54; நேற்று அதிகாலை 5:00 மணிக்கு, இவரது மனைவி ஜெயசீலி பார்த்த போது, செல்வராஜ் வீட்டில் இல்லை. அதிர்ச்சியடைந்தவர், பல்வேறு இடங்களில் அவரை தேடினார்.
இந்நிலையில் பழைய சிறுவங்கூர் எல்லையில், மணிமுக்தா அணை கரையில் செல்வராஜ் அணிந்திருந்த லுங்கி கிடந்தது. கிராம மக்கள் அணையில் இறங்கி தேடியதில் செல்வராஜ் நீரில் மூழ்கி இறந்து கிடந்தது தெரியவந்தது.
இரு சம்பவம் குறித்தும் பகண்டைகூட்ரோடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

