sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பெண் அழைப்பில் தகராறு இருவருக்கு அரிவாள் வெட்டு

/

பெண் அழைப்பில் தகராறு இருவருக்கு அரிவாள் வெட்டு

பெண் அழைப்பில் தகராறு இருவருக்கு அரிவாள் வெட்டு

பெண் அழைப்பில் தகராறு இருவருக்கு அரிவாள் வெட்டு


ADDED : மார் 11, 2025 03:57 AM

Google News

ADDED : மார் 11, 2025 03:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கச்சிராயபாளையம் : மாத்தூர் கிராமத்தில் பெண் அழைப்பு நிகழ்ச்சியில் நடந்த தகராறில் 2 பேரை, அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கச்சிராயபாளையம் அடுத்த பரிகம் கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ச்சுனன் மகன் மணிவண்ணன், 29; இவர் கடந்த 9 ம் தேதி இரவு 12:00 மணி அளவில் மாத்தூர் கிராமத்தில், தனது அக்கா மகள் திருமண பெண் அழைப்பு நிகழ்ச்சியில் உறவினர்களுடன் கலந்து கொண்டார்.

பெண் அழைப்பு ஊர்வலம், மாரியம்மன் கோவில் அருகே சென்றது. அப்போது, அங்கு வந்த அப்பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் ஸ்டாலின்; ராமலிங்கம் மகன் உதயசூரியன்; நல்லதம்பி மகன் சின்னதுரை; ஆகியோர் மேளம் அடிக்கக்கூறி ஊர்வலத்தில் தகராறு செய்தனர்.

இதை தட்டி கேட்ட மணி வண்ணன் மற்றும் அவரது உறவினர் திருப்பதியை அரிவாளால் வெட்டினர்.

இது குறித்த புகாரில்,3 பேர் மீது கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் ஸ்டாலினை கைது செய்த நிலையில், தப்பிய உதயசூரியன், சின்னதுரையை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us