sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ஊராட்சி தலைவரை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

/

ஊராட்சி தலைவரை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

ஊராட்சி தலைவரை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

ஊராட்சி தலைவரை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்


ADDED : ஜூலை 30, 2024 06:21 AM

Google News

ADDED : ஜூலை 30, 2024 06:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்காத ஊராட்சி தலைவரை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உளுந்துார்பேட்டை அடுத்த செங்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட நைனாக்குப்பம் கிராமத்தில் பல நாட்களாக குடிநீர் விநியோகம் இன்றி மக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர். முறையாக குடிநீர் விநியோகிக்க வேண்டும் எனக் கூறி ஊராட்சி தலைவர் மற்றும் செயலாளரிடமும் அப்பகுதி மக்கள் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் அதிருப்தியடைந்த நைனாக்குப்பம் கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் நேற்று பிற்பகல் 3:00 மணியளவில் காலி குடங்களுடன் உளுந்துார்பேட்டை- கொக்கம்பாளையம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

உளுந்துார்பேட்டை இன்ஸ்பெக்டர் வீரமணி, சப் இன்ஸ்பெக்டர் ப்ரீத்தா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக சமரசம் செய்ததைத் தொடர்ந்து, மாலை 4:30 மணியளவில் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us