/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பிள்ளைகளுடன் மனைவி மாயம்: கணவர் புகார்
/
பிள்ளைகளுடன் மனைவி மாயம்: கணவர் புகார்
ADDED : செப் 18, 2024 06:18 AM
கள்ளக்குறிச்சி: எஸ்.ஒகையூரில் காணாமல் போன மனைவி, பிள்ளைகளை கண்டுபிடித்து தரக்கோரி கணவன் போலீசில் புகார் அளித்துள்ளார்.
வரஞ்சரம் அடுத்த எஸ்.ஒகையூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி மனைவி ராஜேஸ்வரி,30; இவர்களுக்கு லாவண்யா,11; முகில்,9; ஆகிய இரு பிள்ளைகள் உள்ளனர். கடந்த 14ம் தேதி கணவன் பழனிசாமி வழக்கம்போல் சுமை துாக்கும் பணிக்கு சென்றுள்ளார்.
தொடர்ந்து சில மணி நேரங்களுக்கு பிறகு வீட்டிற்கு வந்து பார்த்த போது, மனைவி ராஜேஸ்வரி, மகள் லாவண்யா, மகன் முகில் ஆகியோர் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்து பல்வேறு இடங்களில் தேடியுள்ளார்.
எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் காணாமல் போன மனைவி, பிள்ளைகளை கண்டுபிடித்து தரக்கோரி பழனிசாமி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.