ADDED : ஆக 16, 2024 06:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கச்சிராயபாளையத்தில் கணவரை காணவில்லை என மனைவி, போலீசில் புகார் அளித்துள்ளார்.
கச்சிராயபாளையம் அடுத்த அக்கராயபாளையத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன், 47; இவர், கச்சிராயபாளையத்தில் உள்ள ஓட்டலில் சப்ளையராக பணிபுரிகிறார். கடந்த 12ம் தேதி காலை வழக்கம்போல் வேலைக்கு புறப்பட்டு சென்ற சுப்ரமணியன் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவரது மனைவி சுதா அளித்த புகாரின் பேரில், கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

