sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

அரசு 'ஏசி' மற்றும் எஸ்.இ.டி.சி., பஸ்கள் கள்ளக்குறிச்சி வழியாக இயக்கப்படுமா?

/

அரசு 'ஏசி' மற்றும் எஸ்.இ.டி.சி., பஸ்கள் கள்ளக்குறிச்சி வழியாக இயக்கப்படுமா?

அரசு 'ஏசி' மற்றும் எஸ்.இ.டி.சி., பஸ்கள் கள்ளக்குறிச்சி வழியாக இயக்கப்படுமா?

அரசு 'ஏசி' மற்றும் எஸ்.இ.டி.சி., பஸ்கள் கள்ளக்குறிச்சி வழியாக இயக்கப்படுமா?


ADDED : ஜூலை 22, 2024 11:44 PM

Google News

ADDED : ஜூலை 22, 2024 11:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : சென்னை - சேலம், கோயம்புத்துார் மார்க்கமாக செல்லும் அரசு 'ஏசி' மற்றும் அரசு விரைவு போக்குவரத்துக் கழக (எஸ்.இ.டி.சி.,) ஸ்லீப்பர் கோச் பஸ்கள் கள்ளக்குறிச்சி நகர பகுதி வழியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..

கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் சென்னை, சேலம், கோயம்புத்துார், ஈரோடு, திருப்பூர் ஆகிய பகுதிகளில் தங்கி பணிபுரிகின்றனர். அதேபோல், வெளிமாவட்ட கல்லுாரி விடுதிகளிலும் தங்கி மாணவ, மாணவிகள் பலர் படிக்கின்றனர்.

இவர்கள் விடுமுறை நாட்களில் அரசு மற்றும் தனியார் பஸ்களில் பயணிக்கின்றனர். இதில் பெரும்பாலானோர் அரசு 'ஏசி' மற்றும் விரைவு போக்குவரத்துக் கழக பஸ்களில் (எஸ்.இ.டி.சி.,) பயணிக்க விரும்புகின்றனர்.

ஆனால், இந்த பஸ்களின் டிரைவர், கண்டக்டர்கள் கள்ளக்குறிச்சி நகருக்குள் செல்லாது, புறவழிச்சாலை அல்லது டோல் கேட்டில் இறங்கி கொள்ளுங்கள் என கூறுகின்றனர்.

இருப்பினும் சென்னை மார்க்கத்திலிருந்து வருபவர்களுக்கு ஆத்துார் வரையிலான கட்டணமும், சேலம் மார்க்கத்திலிருந்து வருபவர்களுக்கு உளுந்துார்பேட்டை வரையிலான கட்டணம் வசூலிக்கின்றனர்.

தற்போது கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு மாவட்டமாக செயல்படும் நிலையில் சொகுசு பஸ்களில் கள்ளக்குறிச்சி வரையிலான கட்டணம் இன்றி கூடுதலாக வசூலிக்கப்படுகிறது.

அவசரத்திற்காக பயணம் மேற்கொள்பவர்கள் வேறுவழியின்றி இதுபோன்ற பஸ்களில் ஏறி, கள்ளக்குறிச்சி புறவழிச்சாலை அல்லது மாடூர் டோல்கேட்டில் இறங்கி, அங்கிருந்து வேறு வாகனத்தில் பஸ் நிலையத்திற்குச் செல்கின்றனர். குறிப்பாக, இரவு நேரங்களில் வருபவர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.

எனவே, சென்னை - சேலம், கோயம்புத்துார் வழித்தடத்தில் இயக்கப்படும் அரசு 'ஏசி' மற்றும் எஸ்.இ.டி.சி., ஸ்லீப்பர் கோச் பஸ்களை இரவு நேரங்களில் கள்ளக்குறிச்சிக்கு கட்டணம் நியமித்து நகர் பகுதி வழியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பெதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.






      Dinamalar
      Follow us