/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
புகார் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து பெண் தற்கொலை முயற்சி உளுந்துார்பேட்டை டி.எஸ்.பி., அலுவலகம் முன் பரபரப்பு
/
புகார் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து பெண் தற்கொலை முயற்சி உளுந்துார்பேட்டை டி.எஸ்.பி., அலுவலகம் முன் பரபரப்பு
புகார் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து பெண் தற்கொலை முயற்சி உளுந்துார்பேட்டை டி.எஸ்.பி., அலுவலகம் முன் பரபரப்பு
புகார் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து பெண் தற்கொலை முயற்சி உளுந்துார்பேட்டை டி.எஸ்.பி., அலுவலகம் முன் பரபரப்பு
ADDED : மார் 04, 2025 07:17 AM
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டையில், புகார் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து பெண் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
உளுந்துார்பேட்டை அடுத்த களவனுார் பகுதியைச் சேர்ந்தவர் முனியப்பன் மனைவி பரிமளா, 30; கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்து, சந்தோஷ், 9; பவின், 7; என இருபிள்ளைகள் உள்ளனர்.
கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வசிக்கின்றனர். பரிமளா கடந்த ஒராண்டாக சென்னையில் தங்கி கூலி வேலை செய்தவர், சொந்த ஊருக்கு வந்து தந்தை வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவர் இங்கு வசிப்பது பிடிக்காததால் அவரது சகோதரர் மாரிமுத்து, 34; பரிமளாவை வீட்டை, விட்டு வெளியே செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் கடந்த 22ம் தேதி அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இது குறித்து கடந்த 24ம் தேதி பரிமளா உளுந்துார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்து விட்டு 25ம் தேதி பரிமளா சென்னைக்கு சென்று விட்டார்.
இந்நிலையில் களவனுார் அடுத்த கொரட்டங்குறிச்சியில் உள்ள உறவினர் வீட்டில் நடந்த துக்க நிகழ்ச்சிக்கு நேற்று முன்தினம் இரவு பரிமளா வந்தவர் தந்தை வீட்டில் தங்கியுள்ளார்.
நேற்று காலை 8:30 மணியளவில் வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு மாரிமுத்து கூறி மிரட்டல் விடுத்தார்.
இதனால், ஆத்திரமடைந்த பரிமளா தனது 2 மகன்களுடன் நேற்று காலை 11:30 மணியளவில் உளுந்துார்பேட்டை டி.எஸ்.பி., அலுவலகத்திற்கு வந்தார். அங்கு பரிமளா புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறிய போது போலீசார் அவரை கண்டித்துள்ளனர்.
இதனால் பரிமளா கொண்டு சென்ற பெட்ரோலை தன் மீது ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.
உடன், அங்கிருந்த போலீசார் பெட்ரோல் கேனை பிடுங்கி தற்கொலைக்கு முயன்ற பரிமளாவை தடுத்து நிறுத்தினர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.
விழுப்புரம்
செஞ்சி அடுத்த பள்ளிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். மாற்றுத்திறனாளி. இவர், நேற்று காலை 11:00 மணியளவில் கலெக்டர் அலுவலகம் வந்தவர், திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார்.
உடன், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், மணிகண்டனை தடுத்தனர்.
விசாரணையில், அவருக்கு தனக்கு சொந்தமான 2.60 ஏக்கர் நிலத்தை மோசடி செய்து அபகரிக்க முயற்சிப்பதாகவும், தனது கோரிக்கை மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், மனமுடைந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.
பின், போலீசார் அவரை சமாதானம் செய்து, அதிகாரிகளிடம் மனு அளிக்குமாறு கூறி அனுப்பி வைத்தனர்.