/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பூச்சி மருந்து குடித்து பெண் தற்கொலை
/
பூச்சி மருந்து குடித்து பெண் தற்கொலை
ADDED : ஆக 11, 2024 05:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி, : சின்னசேலம் அருகே குடும்பத் தகராறில் பூச்சி மருந்து குடித்த பெண் இறந்தார்.
சின்னசேலம் அடுத்த கல்லாநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர் மனைவி புவனேஸ்வரி, 28; கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. கணவன், மனைவிக்குமிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டது.
இதனால், மனமுடைந்த புவனேஸ்வரி நேற்று முன்தினம் இரவு பூச்சி மருந்து குடித்தார். உடன் சின்னசேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் புவனேஸ்வரி இறந்தார்.
சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.