sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சோப்பு கம்பெனி முதலாளி வீட்டில் 17 சவரன் நகை திருடிய தொழிலாளி கைது

/

சோப்பு கம்பெனி முதலாளி வீட்டில் 17 சவரன் நகை திருடிய தொழிலாளி கைது

சோப்பு கம்பெனி முதலாளி வீட்டில் 17 சவரன் நகை திருடிய தொழிலாளி கைது

சோப்பு கம்பெனி முதலாளி வீட்டில் 17 சவரன் நகை திருடிய தொழிலாளி கைது


ADDED : ஜூன் 06, 2024 03:11 AM

Google News

ADDED : ஜூன் 06, 2024 03:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் முதலாளி வீட்டில் 17 சவரன் நகையை திருடிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி, ஏமப்பேர் கிராமத்தை சேர்ந்தவர் திலகர்,55; சோப் கம்பெனி நடத்தி வருகிறார். கம்பெனியில் 10க்கும் மேற்பட்டோர் வேலை செய்த வருகின்றனர்.

திலகர் கடந்த மே 27ம் தேதி சொந்த வேலை காரணமாக துாத்துக்குடி சென்றிருந்தார்.

மறுநாள், கம்பெனியில் கடந்த 5 ஆண்டாக வேலை செய்து வந்த மயிலாடுதுறையை சேர்ந்த ஜெயராஜ் மகன் ஜெயக்குமார்,32; திலகரை போனில் தொடர்பு கொண்டு, மனைவிக்கு உடல் நிலை சரியில்லை எனக் கூறிவிட்டு சொந்த ஊருக்கு சென்றார்.

கடந்த 30ம் தேதி ஊர் திரும்பிய திலகர், உடனடி பணத் தேவைக்காக நகையை அடகு வைக்க, பீரோ லாக்கரில் திறந்த போது, அதில் வைத்திருந்த 17 சவரன் நகைகளை காணவில்லை. திடுக்கிட்ட திலகர் தனது மனைவி மற்றும் கம்பெனி ஊழியர்களிடம் விசாரித்தார். அதில், விடுப்பில் சென்ற ஜெயக்குமார் தனியாக ஒரு பை எடுத்து சென்றது தெரிய வந்தது.

சந்தேகமடைந்த திலகர் கடந்த 30ம் தேதி கள்ளக்குறிச்சி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஆனந்தன், பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் கவுதமன் ஆகியோர் மயிலாடுதுறைக்கு சென்று ஜெயக்குமாரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் நகைகளை திருடியதை ஒப்புக் கொண்டார்.

அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து ஜெயக்குமாரை கைது செய்த, 17 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us