sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தில் தொழிற்கல்வி பயில விண்ணப்பிக்கலாம்

/

மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தில் தொழிற்கல்வி பயில விண்ணப்பிக்கலாம்

மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தில் தொழிற்கல்வி பயில விண்ணப்பிக்கலாம்

மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தில் தொழிற்கல்வி பயில விண்ணப்பிக்கலாம்


ADDED : ஆக 29, 2024 08:13 AM

Google News

ADDED : ஆக 29, 2024 08:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தின் தொழிற்கல்வி சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கலெக்டர் பிரசாந்த் விடுத்துள்ள செய்திக்குறிப்பு;

உளுந்துார்பேட்டை சிப்காட் தொழிற்பூங்காவில் 2,302 கோடி ரூபாய் முதலீட்டில் 20 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் பவுசென் காலணி உற்பத்திக்கான புதிய ஆலை செயல்பட உள்ளது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்ட இளைஞர்கள் பணியில் சேர்வதற்கு ஏதுவாக, மத்திய அரசின் காலணி பயிற்சி நிறுவனத்தில், காலணி தயாரிப்பு தொடர்புடைய பாடப் பிரிவுகளை படிப்பதற்கு 2024-25ம் ஆண்டிற்கான தொழிற்கல்வி சேர்க்கைக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதில் 2 ஆண்டுகால பயிற்சி காலணி உற்பத்தி மற்றும் வடிவமைப்பு டிப்ளமோ, ஓராண்டு பயிற்சியான காலணி வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு வளர்ச்சியில் மேம்பட்ட சான்றிதழ் ஆகியவைக்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அதேபோல் ஓராண்டு பயிற்சியான காலணி உற்பத்தி தொழில்நுட்பத்தில் மேம்பட்ட சான்றிதழ், 6 மாத கால பயிற்சியான காலணி வடிவமைப்பு மற்றும் உற்பத்தி பயிற்சிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஒன்றரை ஆண்டுகால பயிற்சியான காலணி தொழில்நுட்பத்தில் முதுகலை டிப்ளமோ, ஓராண்டு கால பயிற்சியான காலணி தொழில் நுட்பத்தில் போஸ்ட் டிப்ளமோவுக்கு ஏதேனும் ஒரு பட்டபடிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். அனைத்து பாடப்பிரிவுகளும் ஆங்கில வழி கற்றல் முறையாகும். மாணவ மாணவிகளுக்கு தனி தனி விடுதி வசதி உண்டு. தேர்ச்சி பெற்ற தகுதி வாய்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.

மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தின் தொழிற்கல்வி சேர்க்கைக்காகன விண்ணப்பங்களை கலெக்டர் அலுவலகத்தில் பெற்று வரும் செப்.,3 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு சேர்க்கை ஒருங்கிணைப்பாளர் சேகர் 90259 97996 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இதனை கள்ளக்குறிச்சி மாவட்ட இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கொள்ளப்படுகிறது.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us