sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

இரு தரப்பினரிடையே மோதல் கள்ளக்குறிச்சியில் 10 பேர் கைது

/

இரு தரப்பினரிடையே மோதல் கள்ளக்குறிச்சியில் 10 பேர் கைது

இரு தரப்பினரிடையே மோதல் கள்ளக்குறிச்சியில் 10 பேர் கைது

இரு தரப்பினரிடையே மோதல் கள்ளக்குறிச்சியில் 10 பேர் கைது


ADDED : ஆக 29, 2025 02:56 AM

Google News

ADDED : ஆக 29, 2025 02:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 20 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து 10 பேரை கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த விருகாவூர் பகுதியைச் சேர்ந்தவர் கதிரேசன் மகன் சதிஷ், 25; இவர் நேற்று முன்தினம் மாலை 4:30 மணியளவில் பைக்கில் சென்றார். விருகாவூர் பஸ் நிறுத்தம் அருகே எதிரே மற்றொரு பைக்கில் வந்த அதே பகுதியைச் சேர்ந்த புகழேந்தி என்பவர் மீது மோதியுள்ளார்.

இதனால், அங்கிருந்த புகழேந்தி, அய்யாசாமி ஆகியோர் அதிவேகமாக வந்து விபத்து ஏற்படுத்தியதாக சதிைஷ திட்டி அவரது பைக்கை பறித்துக் கொண்டனர்.

அங்கிருந்து சென்ற சதிஷ், தனது ஆதரவாளர்களை அழைத்துவந்து புகழேந்தி உள்ளிட்டோரிடம் தகராறு செய்துள்ளார். இதனால், இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர்.

இது குறித்து இரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில், சதிஷ், நிகேஷ், 21; குமார்,21; சத்தியமூர்த்தி, 20; ராஜிவ்காந்தி, 21; கர்ணன், 21; வெற்றி, 20; முருகன், 21; பூவரசன், 19; உட்பட 10 பேர் மீதும், மற்றொரு தரப்பில் மதன், 21; பரமசிவம், 51; செல்வராஜ், 50; நாராயணசாமி, 30; ஆனந்தன், 28; அய்யாசாமி, 30; மணிகண்டன், 25; செல்வமணி, 21; பிரபு, 28; மணிவாசகம், 34; ஆகிய 10 பேர் மீது வழக்குப் பதிந்தனர்.

இதில், சதிஷ், நிகேஷ், குமார், சத்தியமூர்த்தி, பூவரசன், பரமசிவம், நாராயணசாமி, ஆனந்தன், பிரபு, மணிவாசகம் ஆகிய 10 பேரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us