ADDED : மார் 26, 2026 08:37 PM

அ நிறம் | அளவு
சங்கராபுரம்: 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
சங்கராபுரம் அடுத்த விரியூஜர் கிராமத்தில் உள்ள இம்மாகுலேட் மகளிர் கல்லுரியில் 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கல்லுரி முதல்வர் குருசம்மாள் தலைமை தாங்கினார். துணை தாசில்தார் தேவதாஸ்,வருவாய் ஆய்வாளர் திவ்யா,வி.ஏ.ஓ.,கார்த்தி ஆகியோர்கலந்து கொண்டு
ஓட்டுப்பதிவின் அவசியம் பற்றி பேசினர். கல்லுரி மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
