sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் 5 நாட்களில் ரூ.11.33 கோடி வர்த்தகம்

/

அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் 5 நாட்களில் ரூ.11.33 கோடி வர்த்தகம்

அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் 5 நாட்களில் ரூ.11.33 கோடி வர்த்தகம்

அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் 5 நாட்களில் ரூ.11.33 கோடி வர்த்தகம்


ADDED : பிப் 17, 2024 05:22 AM

Google News

ADDED : பிப் 17, 2024 05:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார் : அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் கடந்த ஐந்து நாட்களில் ரூ. 11.33 கோடி வர்த்தகமானது.

அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் கடந்த 5 நாட்களில் மட்டும் உளுந்து, நெல் உள்ளிட்ட விவசாய விளை பொருட்கள் அதிக அளவில் ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டது. தற்போது, அறுவடை பணிகள் தீவிரமடைந்திருப்பதால் கடந்த 5 நாட்களில் வரத்து சீராக இருந்தது. இதற்கு காரணம் நெல்லுக்கு ஆயிரம் லாட்டும், உளுந்துக்கு 150 லாட் மட்டுமே ஏலத்தில் அனுமதிக்கப்பட்டது. இதன் காரணமாக கமிட்டி நிர்வாகத்திற்கும் பொருட்களை கையாள்வது உள்ளிட்ட நிர்வாக பணிகள் சுலபமாக அமைந்தது. விலையும் குறையவில்லை. விவசாயிகளுக்கும் வர்த்தகம் லாபகரமாக இருந்தது.

இதன் காரணமாக 5 நாட்களில் 2,752.54 மெட்ரிக் டன் விவசாய விளை பொருட்கள் கையாளப்பட்டு, 11.33 கோடி ரூபாய்க்கு வர்த்தகமானது. ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் அதிகளவிலான விளைபொருட்கள் வர்த்தகமான கமிட்டி பட்டியலில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.






      Dinamalar
      Follow us