/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மீனவர் வலையில் சிக்கிய 12 அடி ராட்சத மலைப்பாம்பு
/
மீனவர் வலையில் சிக்கிய 12 அடி ராட்சத மலைப்பாம்பு
மீனவர் வலையில் சிக்கிய 12 அடி ராட்சத மலைப்பாம்பு
மீனவர் வலையில் சிக்கிய 12 அடி ராட்சத மலைப்பாம்பு
ADDED : பிப் 02, 2026 06:49 AM

சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே ஆற்றில் மீன் பிடித்தபோது, வலையில் 12 அடி நீள ராட்சத மலைப்பாம்பு சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டில் உள்ள மணி ஆற்றில், அதே கிராமத்தை சேர்ந்த ராமசாமி என்பவர் நேற்று பகல் 12:00 மணியளவில் வலை வீசி மீன்பிடித்தார். அந்த வலையை இழுத்தபோது முடியவில்லை. அருகில் இருந்தவர்களின் உதவியுடன் வலையை வெளியே இழுத்தார்.
அப்போது, வலையில் 12 அடி நீளம் கொண்ட ராட்சத மலைப்பாம்பு சிக்கி இருந்தது. இது தொடர்பாக சங்கராபுரம் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த வனத்துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று வலையில் சிக்கிய மலைப்பாம்பினை மீட்டு, அருகில் உள்ள வனப்பகுதிக்கு கொண் டு சென்று விட்டனர்.

