/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பெண்ணிடம் 13 சவரன் நகை வழிப்பறி உளுந்துார்பேட்டையில் துணிகரம்
/
பெண்ணிடம் 13 சவரன் நகை வழிப்பறி உளுந்துார்பேட்டையில் துணிகரம்
பெண்ணிடம் 13 சவரன் நகை வழிப்பறி உளுந்துார்பேட்டையில் துணிகரம்
பெண்ணிடம் 13 சவரன் நகை வழிப்பறி உளுந்துார்பேட்டையில் துணிகரம்
ADDED : பிப் 07, 2024 07:48 AM
உளுந்துார்பேட்டை,: உளுந்துார்பேட்டையிவ் பட்டப்பகலில் பெண்ணிடம் 13 சவரன் நகையை வழிப்பறி செய்த நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
உளுந்துார்பேட்டை, காவேரி நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன் மனைவி சுகன்யா, 43; இவர், தனது மகளை கந்தசாமிபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் விட்டு விட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பள்ளி அருகே பைக்கில் ெஹல்மெட் அணிந்து வந்த மர்ம நபர், சுகன்யா அணிந்திருந்த 13 சவரன் தாலிச் செயினை பறித்துக் கொண்டு தப்பியோடினார்.
இதுகுறித்த புகாரின் பேரில், உளுந்துார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.

