sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

10ம் வகுப்பு பொதுத்தேர்வு 19,436 பேர் பங்கேற்பு : 553 பேர் 'ஆப்சென்ட்'

/

10ம் வகுப்பு பொதுத்தேர்வு 19,436 பேர் பங்கேற்பு : 553 பேர் 'ஆப்சென்ட்'

10ம் வகுப்பு பொதுத்தேர்வு 19,436 பேர் பங்கேற்பு : 553 பேர் 'ஆப்சென்ட்'

10ம் வகுப்பு பொதுத்தேர்வு 19,436 பேர் பங்கேற்பு : 553 பேர் 'ஆப்சென்ட்'


ADDED : மார் 29, 2025 05:07 AM

Google News

ADDED : மார் 29, 2025 05:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி,: மாவட்டத்தில் நடந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 19,463 மாணவ, மாணவியர் எழுதினர். 553 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.

மாவட்டத்தில் 214 அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 10,221 மாணவர்கள், 9,795 மாணவியர் என மொத்தம் 20,016 பேர் 10ம் வகுப்பு பயின்றனர். இந்த மாணவர்களுக்கான, பொதுத்தேர்வு 90 மையங்களில் நேற்று துவங்கியது. மேலும், தனித்தேர்வர்கள் 585 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

நேற்று காலை 10:00 மணியளவில் தேர்வு தொடங்கியது. இதில், 9,867 மாணவர்கள், 9,596 மாணவிகள் என மொத்தமாக 19,463 பேர் தேர்வில் பங்கேற்றனர். 354 மாணவர்கள், 199 மாணவியர் என 553 பேர் தேர்வெழுதவில்லை. தனித்தேர்வர்களில் 367 ஆண்கள், 151 பெண்கள் என 518 பேர் தேர்வில் பங்கேற்றனர். 50 ஆண்கள், 17 பெண்கள் என 67 பேர் தேர்வெழுதவில்லை.கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த பொதுத்தேர்வை கலெக்டர் பிரசாந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, சி.இ.ஓ., கார்த்திகா உடனிருந்தார். தேர்வை கண்காணிக்க முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், பறக்கும் படை அலுவலர்கள், வழித்தட அலுவலர்கள், அறை கண்காணிப்பாளர்கள் என 2,800 அரசு அலுவலர்கள் பணியில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us