sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

அண்ணாமலையாருக்கு 19ம் தேதி தீர்த்தவாரி

/

அண்ணாமலையாருக்கு 19ம் தேதி தீர்த்தவாரி

அண்ணாமலையாருக்கு 19ம் தேதி தீர்த்தவாரி

அண்ணாமலையாருக்கு 19ம் தேதி தீர்த்தவாரி


ADDED : ஜன 16, 2024 06:31 AM

Google News

ADDED : ஜன 16, 2024 06:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: திருவண்ணாமலை அண்ணாமலையாருக்கு மணலுார்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் வரும் 19ம் தேதி தீர்த்தவாரி விழா நடக்கிறது.

தட்சிணாபினாகினி என போற்றப்படும் புண்ணிய நதியாக விளங்கும் தென்பெண்ணையில், தைத்திங்கள் முதல் நாளிலிருந்து ஐந்து தினங்களுக்கு அனைத்து நதிகளும் தத்தம் தீவினையை போக்கிக் கொள்ள தென்பெண்ணையில் சேர்கிறது என்பது ஐதீகம்.

சிறப்பு வாய்ந்த பெண்ணையில் திருவண்ணாமலை அபிதகுஜாம்பாள் சமேத அண்ணாமலையார் ஆண்டு தோறும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். இதனை அடுத்து வரும் 18ம் தேதி திருவண்ணாமலையிலிருந்து அண்ணாமலையார் புறப்பாடாகி பாதம் தாங்கிகளில் 19ம் தேதி மணலுார்பேட்டை வந்து அடைகிறார்.

விநாயகர், அம்மன் உள்ளிட்ட சுவாமிகள் அண்ணாமலையாரை வரவேற்று தென்பெண்ணை நதிக்கு அழைத்துச் செல்லும் வைபவத்தை தொடர்ந்து தீர்த்தவாரி வைபவம் நடக்கிறது.

தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட பந்தலில் அபிதகுஜாம்பாள் சமேத அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்துருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

இவ்விழாவிற்காக நேற்று காலை 6:00 மணிக்கு தீர்த்தவாரி பந்தல் அமைப்பதற்கான பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது.






      Dinamalar
      Follow us