/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பெட்ரோல் வைத்திருந்த 2 பேர் கைது
/
பெட்ரோல் வைத்திருந்த 2 பேர் கைது
ADDED : ஏப் 01, 2025 04:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பகுதியில் அனுமதியின்றி விற்பனைக்காக பெட்ரோல் வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் பரிமளா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, பொற் படாக்குறிச்சியைச் சேர்ந்த தனசேகர், 52; தனது பெட்டிக் கடையில் விற்பனைக்காக பாட்டிலில் அடைத்து பெட்ரோல் வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, தனசேகரை கைது செய்து அவரி டமிருந்த 1.5 லிட்., பெட் ரோலை பறிமுதல் செய்தனர். அதேபோல், விற்பனைக்காக கடையில் பெட்ரோல் வைத்திருந்த தென்கீரனுார் சபாபதி, 55; என்பவரையும் கைது செய்து, 2 லிட்டர், பெட்ரோலை பறிமுதல் செய்தனர்.