/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆட்டோவில் மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது
/
ஆட்டோவில் மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது
ADDED : நவ 18, 2024 07:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தியாகதுருகம் : தியாகதுருகம் அருகே ஆட்டோவில் மதுபாட்டில் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தியாகதுருகம் இன்ஸ்பெக்டர் ஞானசேகர் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, கலையநல்லுார் டாஸ்மாக் கடை அருகே பிரிதிவிமங்கலத்தைச் சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் மாசிலாமணி, 33; கிருஷ்ணன் மகன் ஏழுமலை, 39; ஆகிய இருவரும் ஆட்டோவில் மதுபாட்டில் விற்றது தெரிந்தது.
உடன் இருவர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்து, 180 மி.லி., அளவு கொண்ட 69 மது பாட்டில்கள் மற்றும் ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.